×

சம்பளம் தரவில்லை பேராசிரியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

அருப்புக்கோட்டை, மார்ச் 26: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் அரசு உதவி பெறும் தனியார் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பேராசிரியர்கள் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து உயர் கல்வித்துறை, கல்லூரி கல்வி இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

சம்பளம் வழங்கக்கோரி, சில தினங்களுக்கு முன் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டனர். அப்போது கல்லூரி கல்வி இணை இயக்குநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். மேலும், கடந்த 22ம் தேதி மதியம் பட்டினி போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று கல்லூரி நுழைவுவாயிலில் பேராசிரியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.

Tags : Professors ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...