×

காதலுக்கு எதிர்ப்பு: மைனர் பெண் சாவு

திருப்புத்தூர், மார்ச் 26: திருப்புத்தூர் அருகே காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த மைனர் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகள் அபிராமி(17). இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த அபிராமி கடந்த மார்ச் 16ம் தேதி வீட்டில் விஷ மருந்தை குடித்தார். இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...