×

புதுச்சத்திரம் பகுதியில் ₹1.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி

சேந்தமங்கலம், மார்ச் 22: புதுச்சத்திரம் பகுதியில், ₹1.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை சேலம் கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  சேந்தமங்கலம் நெடுஞ்சாலைதுறை உட்கோட்டத்தின் சார்பில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பாச்சல், கதிராநல்லுர் மற்றும் சிங்களாந்தபுரம் சாலை 5 கிமீ தூரத்திற்கு ₹31.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ₹27.40 லட்சம் மதிப்பில் அம்மபாளையம் முதல் நவணி ரோடு வரையும்,  ₹31.50 லட்சம் மதிப்பில் முசிறி, தத்தாதிரிபுரம் சாலையும், எருமப்பட்டி ஒன்றியம் வரதராஜபுரம் முதல் வரகூர் சாலை ₹40.33 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலைகளை சேலம் கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சாலையின் தரம் பரிசோதிக்கப்பட்டது. பணியை குறித்த காலத்திற்குள் தரமாக அமைத்தல் மற்றும் சாலையை முறையாக பராமரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், நாமக்கல் கோட்டப் பொறியாளர் சசிகுமார், சேந்தமங்கலம் உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...