×

நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட மாஜி படைவீரர்களுக்கு அழைப்பு

புதுக்கோட்டை, மார்ச் 22: புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  ஏப்ரல் 2019 ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் அனைத்து நாட்களிலும் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை  மற்றும் படைப்பணி சான்றுடன் தங்களது விருப்பத்தினை  நேரில் வருகை தந்து பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : soldiers ,elections ,
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...