×

கறம்பக்குடி அருகே மாணவியிடம் வம்பு செய்தவர் சிறையிலடைப்பு

கறம்பக்குடி, மார்ச் 21: கறம்பக்குடி அருகே மைலன்கோன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய  தொழிலாளி.  இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள், மகன் உள்ளார்.  இவரது மகள் அப்பகுதியிலுள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினர் வீட்டிற்கு சென்னிய விடுதி கிராமத்தை சேர்ந்த ராமன்(40) அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது ராமன் கல்லூரி மாணவியிடம் அவதூறாக பேசி, அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை ராஜேந்திரன் ராமனிடம் கேட்டபோது அவரை கட்டையால் தாக்கி காயப்  படுத்தியுள்ளார். இது குறித்து மாணவி கறம்பக்குடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் களனியப்பன் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags : jailor ,Karambukudi ,
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!