×

அஞ்சல் ஆயுள் காப்பீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஊட்டி, மார்ச் 20: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.
 இதுகுறித்து நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் குணசீலன் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டாளர்கள் மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.03.2019 அன்று முடிவடையும் காலாண்டிற்கான அஞ்சல் ஆயுள் காப்பீட்டாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டாளர்கள் இது சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏேதனும் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி 643001 என்ற விலாசத்திற்கு வரும் 22ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பி வைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Postage insurer shortening meeting ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு