×

தேர்தல் விதிமுறை அமலாகியும் அழிக்கப்படாமல் இருக்கும் அதிமுக சுவர் விளம்பரங்கள் அதிகாரிகள் மெத்தனம்

புதுக்கோட்டை, மார்ச் 20: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுவற்றில் எழுதப்பட்டுள்ள ஆளுங்கட்சி விளம்பரம் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளது. இவ்விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து பாலங்கள், மதகுகள், அரசு அலுவலக சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் கட்சி கொடி கம்பங்கள், தலைவர்களி சிலைகள், பேனர்கள், கட்அவுட்களை மறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்து 10 நாட்களை கடந்தும் புதுக்கோட் டை மாவட்டத்தில் சொந்தமான குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் நூலகம் செயல்படும் இடத்தில் உள்ள சுவரில் ஆளுங்கட்சியின் விளம்பரம் எழுதப்பட்டு இன்னும் அழிக்கப்படாமல் உள்ளன. இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் தெரிவிக் கின்றனர். எனவே, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இந்த விஷயத்தில் தலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...