×

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச் 20:  பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து திருமானூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொள்ளாச்சியில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, பெண் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்ககோரி திருமானூர் பேருந்து நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கலைமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட தலைவர் பாக்கியம், அரியலூர் ஒன்றிய செயலாளர் மலர்கொடி கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பெருகி கொண்டே வருகின்றன. இதை தடுக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : protest ,incident ,Pallachchi ,community ,Matheran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...