×

கரூர் திருக்காம்புலியூரில் பராமரிப்பின்றி பழுதடைந்த குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் அவதி

கரூர், மார்ச் 20: குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் திருக்காம்புலியூரில் மிகவும் பழமையான குடிநீர் தொட்டி உள்ளது. குடிநீர் தொட்டி நீண்டகாலமக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. செடிகள் முளைத்தும், நீரேற்றம் செய்யும் வேளைகளில் நீர் கசிவு ஏற்பட்டும் வருகிறது. குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையிலும் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. உடனடியாக தொட்டியை சீரமைக்க வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கூடுதல் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Tirukkampuliyur ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை;...