×

சென்னையில் முதல் நாளில் 6 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: நடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்காக ெசன்னை மாவட்டத்தில் முதல் நாளில் நேற்று 6 ேபர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. சென்னை  மாவட்டத்தில் உள்ள வட சென்னை தொகுதியில் இந்திய மக்கள் கட்சி (மதசார்பற்றது) சார்பில் ஒரு வேட்பாளரும், எஸ்யூசிஐ சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சை ஒருவர் என்ற மொத்தம் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  இதைப்போன்று ெதன் சென்னை தொகுதியில் எஸ்யூசிஐ கட்சியின் வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மத்திய சென்னை தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல்  செய்யவில்லை. இடைத் தேர்தல் நடைபெறும் பெரம்பூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.முதல் நாளில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 6 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை தவிர்த்து வரும் 26 ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...