×

அரசு வேலை பெற பணம் கொடுத்தால் நடவடிக்கை

நாமக்கல், மார்ச் 19: அரசு வேலை வாய்ப்பு பெற பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அருளரசு எச்சரித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவோ, மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேரவோ பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலோ, பெற்றாலோ அதற்கு உடந்தையாக இருந்தாலோ பணம் கொடுப்பவர், வாங்குபவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்பி அருளரசு தெரிவித்துள்ளார்.

Tags : government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...