×

திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை, மார்ச்19:  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சிறுபாண்மையினர் நலப்பிரிவு சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபாண்மை நலப்பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் லியாக்கத் அலி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தனாக கலந்துகொண்ட திண்டுக்கல் லியோனி பேசியதாவது: திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் ஈடுபடுத்திகொள்ளும். தற்போது தமிழகத்தில், மத்தியிலும்  நடைபெறும் ஆட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இதுவரை ஏற்படவில்லை.
இனியும் ஏற்படாது. இதனால் வரும் தேர்தல்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு தக்க பாட புகட்ட நாம் அனைவரும் இணைந்து தயாராக வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் னைநாமுகமது, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன்,சொத்துபாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், துரை திவ்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Youth Awakening Day Campaign ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி