×

லாரிகள் நேருக்குநேர் மோதல் டிரைவர் பரிதாப பலி

ஜெயங்கொண்டம், மார்ச் 19: ஜெயங்கொண்டம் அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரக்குழி கிராமம் வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27. டிரைவரான இவர் லாரியில் இடதுபுறம் உட்கார்ந்திருந்தார். லாரியை நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் ஜெயங்கொண்டம் ரோட்டில் செந்துறை பிரிவு சாலையில் கலையரசன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, கலையரசன் லாரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரகாஷின் தந்தை தங்கமணி (48), ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி
வருகின்றனர்.

Tags :
× RELATED லால்குடியில் அஸ்வின்ஸ் புதிய கிளை திறப்பு