×

தேர்தல் விதி மீறல் அமமுக மீது வழக்கு

திருப்புத்தூர், மார்ச் 19:  தேர்தல் விதிகளை மீறியதாக அமமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் திருப்புத்தூரில் நேற்று மதியம் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளருக்கு அதிக வாகனங்களை கொண்டு வரவேற்பு கொடுத்ததாகவும், தேர்தல் விதிகளை மீறி பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாகவும், அனுமதியின்றி பொது இடத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்புத்தூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், நகர் கழக செயலாளர் ரஹீம் மற்றும் பலர் மீது திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Amitabh ,
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...