×

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி, மார்ச் 15: கோடை சீசன் நெருங்கி வரும் நிலையில், தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சமவெளிப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாள் தோறும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஊட்டி படகு இல்லத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்கள் அங்குள்ள படகுகளில் சவாரி செய்ய ஆர்வம் காட்டினர். குறிப்பாக, மிதி படகுகளில் சவாரி செய்ய ஆர்வம் காட்டினர். சுற்றுலா பயணிகள் வருகையால், அங்குள்ள சிறிய பூங்கா களைகட்டியது.

Tags : Tourist arrivals ,Ooty ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்