×

விவசாயிக்கு உருட்டுக்கட்டை அடி வாலிபர் கைது

ஜெயங்கொண்டம், மார்ச் 15: ஜெயங்கொண்டம் அருகே உள்ள  பெரியதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(42), விவசாயி. இவர் ஆண்டிமடம்  நான்கு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆண்டிமடம்  பகுதியை சேர்ந்த அப்பு (எ) ஸ்டாலின்(21), செல்வமணி(19) ஆகிய  இருவரும் பழனிவேலிடம் திடீரென வாய்த்தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தகராறுமுற்றி  கைகலப்பானது. அப்போது  அப்பு கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பழனிவேல் தலையில் அடித்து காயம்  ஏற்படுத்திவிட்டு செல்வமணியுடன் தப்பியோடினார். இதில் காயமடைந்த பழனிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து ஆண்டிமடம் போலீசார்  வழக்குப்பதிந்து அப்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தலைமறைவான செல்வமணியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்