×

வியாபாரிகள் சங்கம் சார்பில் சிஆர்பிஎப்., வீரர்களுக்கு அஞ்சலி

மஞ்சூர், பிப். 20: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப்., வீரர்களுக்கு மஞ்சூர் வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   மஞ்சூர் அருகே அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி பேரணி நடத்தினர். கீழ்பஜாரில் துவங்கி இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய சினிமா தியேட்டர் அருகே முடிந்தது.
அங்கு வீரர்களில் படத்திற்கு மாலை தூவி அஞ்சலி செலுத்தனர்.  இதில், மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சஜி, பாரூக், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் ஓட்டுனர் உரிமையாளர் சங்கம். கட்டிடத்தொழிலாளர் சங்கம் மற்றும் போலீசார், பொதுமக்கள் உள்பட 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே கார்டன் சிறு வியாபாாிகள் சங்கம் சார்பில் காஷ்மீரில் வீரமரணமடைந்த  வீரர்களின் படத்திற்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான வியாபாாிகள் கலந்து கொண்டனர்.

Tags : CRPF ,merchants association ,
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை