×

வெள்ளலூரில் ஆய்வாளர் வீட்டில் 25 பவுன் தங்க நகை, பணம் திருட்டு

கோவை, பிப்.20: கோவை அருகே வெள்ளலூரில் வருவாய் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கோவை அருகே உள்ள வெள்ளலூர் எல்ஜி நகரை சேர்ந்தவர் நிர்மல் குமார்.(36) கோவை சிவில் சப்ளை பிரிவில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். பின் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்மல் குமார், உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து நிர்மல் குமார் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி போத்தனூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : inspector home ,Vellalur ,
× RELATED கோவை அருகே குப்பை கிடங்கில் 3-வது நாளாக...