புதுக்கோட்டை, பிப்.20: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று பூங்குடி கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டம் நடை பெற்றது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி , பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். திமுக ஆட்சி தமிழகத்தில் வந்தவுடன் மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வடக்கு மாவட்ட வக்கீல் அணிஅமைப்பாளர் சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.