×

நாசரேத்தில் மனுநீதி நாள் முகாம்

நாசரேத், பிப். 15: நாசரேத் கிராம சாவடி அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஏரல் வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். குடும்பஅட்டை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை, முதியோர் தொகை, நெடுஞ்சாலை இதர துறைகளை சார்ந்த சுமார் 100 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களுக்கு மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் மனுநாள் முகாமில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டன.  இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் நாசரேத் சுப்பிரமணியன், மூக்குப்பீறி சுப்புராம், வெள்ளமடம் கார்த்திகேயன், குறிப்பன்குளம் முத்துராஜ், கிராம உதவியாளர்கள் கண்ணன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : camp ,Mannuth Day ,Nazareth ,
× RELATED வங்கி ஊழியரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது