×

நாமக்கல்லில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், பிப்.15: நாமக்கல்லில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணியை, எஸ்ஐ விஜயராஜ் தொடங்கி வைத்தார். சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்தியும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, கேஸ் ஏஜென்சீஸ் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர். பேரணியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் துணை பொது மேலாளர் அன்புசெழியன், விற்பனை அதிகாரி கோகுலகண்ணன், கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Fuel economy austerity rally ,Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...