×

ஆயக்காரன்புலம் கைகாட்டியில் பஸ் நிறுத்தம் அருகே சாலை படுமோசம்

வேதாரண்யம், பிப்.15: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் இருபுறமும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே மாணங்கொண்டான் ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.2 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கடந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.  இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ள இப்பாலத்தின் எதிரே வேதாரண்யம் - திருத்துறைபூண்டி பிரதான சாலையில் தண்ணீர் வடிவதற்காக போடப்பட்டிருந்த பழைய குழாய் பாலங்களை அகற்றி விட்டு காங்கீரீட் பாலம் கட்டப்பட்டது.  பால வேலைகளினால் சேதம் அடைந்த பிரதான சாலையில் பாலத்தின் இருபுறமும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.  இந்த பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த மரண பல்லங்களினால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுகிறது.  பாலம் வேலை முடிந்து பல நாட்கள் ஆகியும் இந்த சாலையின் இருபுறமும் உள்ள பள்ளங்கள் சீர்செய்யபடாமல் உள்ளது.      

மேலும் இந்த பாலத்தின் அருகில் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி போர்கால அடிப்படையில் சாலையை சரிசெய்து குடிநீர் குழாய் ஏற்பட்டுள்ள உடைப்பையும் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stop ,Kaikatti ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...