×

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

முஷ்ணம் பிப். 15: முஷ்ணம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக்கொள்ள எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அகற்றவில்லை.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பரமேஷ்வரி, உதவி பொறியாளர் கார்த்திக், சாலை ஆய்வாளர் வெற்றிசெல்வம் ஆகியோர் முன்னிலையில் சாலை ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க முஷ்ணம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Tags : highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!