×

ராஜபாளையம் அருகே குப்பை மேடாகும் தோட்டச்சாலை ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

ராஜபாளையம், பிப். 14: ராஜபாளையம் அருகே, தோட்டச் சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இனாம் செட்டிகுளம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பைகளை, அப்பகுதியில் தோட்ட நிலங்களுக்கு செல்லும் சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கிராமத்தில் வாறுகால் வசதியில்லாத காரணத்தினால் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலையில், குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதில் உள்ள பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருட்கள் விவசாய வேலைகளுக்கு செல்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன. மழை நேரங்களில் கொசுக்கள் உற்பத்தி குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. எனவே, இனாம்செட்டிகுளத்தில் விவசாய நிலங்களுக்கு சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, வேறு இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajapalayam ,trash farming ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!