×

திருச்சி சிறை அங்காடியில் இன்று முதல் ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனை

திருச்சி, ஜன.23:   திருச்சி மத்திய சிறை அங்காடியில் இன்று முதல் ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படவுள்ளது.
 திருச்சி மத்திய சிறையில் இரண்டு சிறைத்தோட்டங்கள் உள்ளன. அதில் காய்கறிகள், பழங்கள் பயிரிடப்பட்டு, சிறைவாசிகளால் பராமரிக்கப்படுகின்றன. திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தோட்ட உற்பத்தியை விரிவுபடுத்தி சிறைவாசிகளின் மறுவாழ்வுக்காகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் சிறை அங்காடியில் விற்பனை செய்ய உத்தரவிட்டார். இதன் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது. இதையடுத்து, அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் (ஆர்கானிக்) சிறிய வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. சிறை கண்காணிப்பாளர் முருகேசன் மேற்பார்வையில் இப்பணிகள் நடக்கிறது. அறுவடை செய்யப்பட்ட ஆர்கானிக் சிறிய வெங்காயம் கிலோ ரூ.30க்கு சிறை அங்காடிகளில் இன்று முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என சிறைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags : jail store ,Tiruchi ,
× RELATED திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது