×

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

தாம்பரம், ஜன. 23: மேற்கு தாம்பரம், மாந்தோப்பு, மீனாம்பாள் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரவீன் (21). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் அதனால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் புடவையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை