காரைக்குடி, ஜன. 22: காரைக்குடி பழைய, புதிய பஸ்நிலைய பகுதிகளில் ‘தோள் கொடு தோழா’ சமூக பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மல்லிகா அர்ஜூனன் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் அருண்குமார், மணிகண்டன், நசிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராமப்பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களை குடிமரமத்து செய்ய வேண்டும். யூகலிப்டஸ் மரம் நடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதனை தடுத்த நிறுத்த வலியுறுத்தி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.