×

மாவட்டம் பொங்கல் விளையாட்டு விழாவில் டிரைவரை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

செம்பட்டி, ஜன. 22: பொங்கல் விளையாட்டு விழாவில் டிரைவரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
கொடைரோடு அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பாலசுப்பிரமணி(23). டிரைவரான இவர் சம்பவதன்று பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது வந்தபோது, பாலசுப்பிரமணிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சரவணக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றி மோதிக் கொண்டனர். இதில் பாலசுப்பிரமணி, சரவணக்குமார் விரலை கடித்ததில் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணி மீதும், பாலசுப்பிரமணி கொடுத்த புகாரில் பேரில் சரவணக்குமார், இவரது தாய் கலா, காசிப்பாண்டி, மருதுபாண்டி, பாலமுருகன், ஆர்.மருதுபாண்டி, பாலாஜி என்ற மணி ஆகியோர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : persons ,Pongal Sports Festival ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...