×

2 பெண்களிடம் 15 பவுன் பறிப்பு

அருப்புக்கோட்டை, ஜன. 22: அருப்புக்கோட்டையில் 2 பெண்களிடம் 15 பவுன் செயினை பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை மங்கலம்மாள் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி மகேஸ்வரி (57). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பேத்தியோடு எஸ்எஸ்பி தெருவில் நடந்து வந்தார். டூவீலரில் வந்த இருவர், அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர். பின்னர், அங்கிருந்த சென்ற மர்மநபர்கள் இருவரும், எதிரே வந்த மேனேஜர் சிதம்பர நாடார் தெருவை சேர்ந்த பிரேமலதாவிடம் 11 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர். மகேஸ்வரி, பிரேமலதா கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அருப்புக்கோட்டை பகுதியில் வழிப்பறி, திருட்டு அதிகரித்து வருவதால் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு