×

புதுக்கோட்டையில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் தீர்த்தவாரி

புதுக்கோட்டை, ஜன.22:  புதுக்கோட்டையில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் நடந்த தீர்த்தவாரியில் பக்தர்கள் குவிந்தனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை  திருகோகர்னேஸ் வரர், திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் உடனுறை  பிரகதாம்பாள், புதுக் கோட்டை சாந்தநாதசுவாமி உடனுறை வேதநாயகி அம்மன்,  கோட்டூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விராச்சிலை வில்வம்வனேஸ்வரர் உள்ளிட்ட  கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக புதுக்கோட்டை  பூசத்துறை யில் உள்ள வெள்ளாற்று பாலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர்  சுவாமிகளுக்கு வெள்ளாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடை பெற்றது. இதில்  புதுக்கோட்டை, நமணசமுத்திரம், திருமயம், கோட்டூர், பூசத்துறை, விராச்சிலை  மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும்  அன்ன தானம் வழங்கப்பட்டது. திருவரங்குளம் சிவன் கோவிலில் இருந்து சுவாமி,  அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி வாகனத்தில் எழுந்தருள செய்து 2  சப்பரங்களில் மேளதாளத்துடன் ஊர்வலமாக திருவிடையார்பட்டி வெள்ளாற்றிற்கு  கொண்டு சென்றனர். பின்னர் சுவாமி அம்பாளு-க்கு தீர்த்தவாரி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Tags : Thiruvathirai ,temples ,Murugan ,Pudukkottai ,Thaipuzha ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு