×

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 485 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை,ஜன.22: புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 485 மனுக்கள் குவிந்தன.
புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடை பெற்றது. கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார்.  சாலை வசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை,  திருநங்கைகளுக்கான வீட்டு மனை பட்டா உள்ளிட்ட
485 மனுக்கள் அளிக்கப்பட்டன.மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுமீது உரிய நடவடிக்கை எடுக்கு மாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உலக சிக்கன நாள் விழா 2018 மாவட்ட  அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி  பெற்ற 17 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது.

Tags : meeting ,office ,New Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...