×

கஜா புயல் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கந்தர்வகோட்டை, ஜன.22: கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதமடைந்தது. கந்தர்வகோட்டை  பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் அதிகளவில் சேதம் ஏற்பட்டதால் சீரமைப்பு  பணிகள்  2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. புயலால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரண பொருட்கள், நிவாரண நிதி  வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  கந்தர்வகோட்டை அருகே  குளத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கஜா புயல்  நிவாரணம் வழங்கப்பட்டதில்  சிலருக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை என  பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை கண்டித்தும், விடுபட்டவர்களுக்கு  உடனடியாக நிவாரணம் வழங்க கோரி நேற்று காலை கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த  கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மற்றும் போலீசார் அங்கு வந்து  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தபோராட்டத்தால் கறம்பக்குடி-தஞ்சை சாலையில்  போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் தாமதமானதால் பள்ளி  மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

Tags : storm ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...