புதுக்கோட்டை, ஜன.22: தஞ்சை மண்டல அளவில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப்போட்டியில் புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 48 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் இரண்டாமிடம் பெற்றனர்.
இப்போட்டியில் இரண்டாமாண்டு சிவில் துறை மாணவர் பார்த்தசாரதி 20 புள்ளிகள் பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். தன் மூலம் இக்கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் மாநில அளவிலான தடகளப்போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். மாணவர் களையும் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட உடற்கல்வி இயக்குனர் பிரபாகா் ஆகியோரை கல்லூரி சேர்மன் கதிரேசன், தாளாளர் கருப்பையா, முதல்வர் வெங்கடேஷ், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரிய, அலுவலர்கள் பாராட்டினர்.