×

சிதம்பரத்தில் பூட்டியிருந்த மளிகை கடையில் தீவிபத்து பொருட்கள் எரிந்து சாம்பல்

சிதம்பரம், ஜன. 22: சிதம்பரம் திரவுபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை(43). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இரவு 10.30 மணியளவில் இவரது கடை தீப்பிடித்து எரிவதாக அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக ராஜதுரை மற்றும் அப்பகுதியினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பிரிட்ஜ், 2 தையல் மெஷின்கள், மளிகை பொருட்கள் எரிந்து சாம்பலானது.ராஜதுரை ஊதுவத்தி மொத்த விற்பனையாளர் என்பதால் அவர் ஸ்டாக் வைத்திருந்த ஏராளமான ஊதுவத்திகளும் எரிந்து கருகியது. லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் தீவிபத்தில் எரிந்து சாம்பலானது.

Tags : grocery store ,Chidambaram ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்