×

டிரைவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

திருச்செங்கோடு, ஜன.18: திருச்செங்கோடு பக்தவத்சலம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(33). டிரைவரான இவர், கடந்த 15ம் தேதி பொங்கல் விழாவின்போது தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு காரில் திரும்பும்போது, மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் 2 கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இதனால், பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்