×

உலக மண்வள தினவிழா

ஜெயங்கொண்டம், டிச.12: ஆண்டிமடம் வேளாண்மைத் துறை சார்பில் உலக மண்வள தினவிழா ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சுகந்தி மண் ஆய்வுகள் அடிப்படையில் உரமிடுவதால் உரச்செலவு குறைவதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படும், உயிர் உரங்கள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம், மண்வள அட்டையில் உள்ள விபரங்கள் குறித்தும் விரிவாக விளக்கி கூறினார். திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், மண் வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தகூடாது என்றும் விளக்கினார். மேலும் பிகோ புரொஜக்டர் மூலம் மண் மாதிரி எடுக்கும் முறை குறித்து கானொளி காட்சி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இறுதியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. விழாவில் உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் கொளஞ்சி நன்றி கூறினார்.

Tags : World Earth Day ,festival ,
× RELATED உலக பூமி தினத்தையொட்டி டிசிடபிள்யூ...