×

மனுக்களை விசாரிக்காததால் கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் திடீர் தர்ணா

நாமக்கல், டிச.11: மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் கணேசபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்(65). இவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை உறவினர் ஏமாற்றி விட்டதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், இவரது மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தியாகராஜன், நேற்று காலை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி, மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
 இது குறித்து போலீசார் கூறுகையில், ‘சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றிவிட்டதாக தியாகராஜன்  தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவரிடம் அதற்கான எந்தவித ஆவணமும் இல்லை,’ என்றனர்.

Tags : darana ,office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...