×

திருச்செங்கோட்டில் டிஎஸ்பியிடம் கொமதேகவினர் மனு

திருச்செங்கோடு, டிச.11: பெண்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டிஎஸ்பியிடம் கொமதேகவினர் மனு அளித்தனர்.நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் தலைமையில், திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகத்திடம் நேற்று மனு அளித்தனர். அதில், சமூக வலை தலங்களில் பெண்களை இழிவுபடுத்தி, சாதி மோதலை உருவாக்கும் வகையில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் சேன்யோ குமார், நாகராஜ், நந்தகுமார், ஜெயகுமார் மற்றும் மகளிரணியினர் உடனிருந்தனர்.

Tags : DSP ,Tiruchengode ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...