சிவகங்கை, டிச.11: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவி குத்துச்சண்டை போட்டியில் சாதசனை படைத்தார். திருப்பூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 36-38 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி சகானா மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தார். மாணவி சகானாவை பள்ளிச்செயலர் சேகர், தலைமையாசிரியர் முத்துக்குமார், தலைமை பயிற்சியாளர் நிமலன் மற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாணவியின் பெற்றோர் பாராட்டினர்.