×

மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலி

சிங்கம்புணரி, டிச. 11: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் உத்தம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா(57). நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது சில வாரங்களுக்கு முன்பு வீசிய புயலால் மின் கம்பத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி தொங்கியபடி இருந்துள்ளது. மின்கம்பியை கருப்பையா அகற்ற முயலும் போது மின்சாரம் தாக்கி கருப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருப்பையா உறவினர்கள் கூறும்போது, மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் அறுந்த மின் கம்பிகளை அகற்றாமல் தரையில் தொங்கியது. அவற்றை அகற்ற முயன்று விவசாயி கருப்பையா பலியானதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...