கடந்த மாதம் ஆலம்பாடி ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதில் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை, எம்எல்ஏ பரமசிவம் கலந்து கொண்டு குறைகளை கேட்டனர். அப்போது பிச்சனாம்பட்டி காலனியில் 3 மாதங்களாக குடிநீர் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர், எனவே விரைந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். ஆனால் இம்மனு கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்ட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.