×

கள்ளூர் ஊராட்சியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

அரியலூர், டிச.7: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு, விளாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளி  மாணவ, மாணவியர் பள்ளி பரிமாற்ற திட்டத்தின்படி வந்தனர். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியோடு வரவேற்றனர். இதில் மாணவர்களுக்கு தமிழ் படம் ஐ சி டி மூலம் கற்பிக்கபட்டது. மேலும் களையும், கை வண்ணம் என்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் சாந்திராணி, வட்டார மேற்பார்வையாளர் அமுதா, ஆசிரியர்கள் (பொறுப்பு) ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Kallur ,
× RELATED கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை