×

அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு

திருவில்லிபுத்தூர், டிச.7: டாக்டர் அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை  முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை இயக்க  மாவட்ட அமைப்பாளர் புனிதன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகர துணைச் செயலர்கள் அறிவுமிக்கேல், ஜெலஸ்டின், டேனியல், முகாம் நிர்வாகிகள் சதீஷ், அய்யர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆதித்தமிழர் பேரவை சாத்தூர் ஒன்றியச் செயலாளர்  பாண்டியன், ஒன்றிய தலைவர்  கணேசன்,  ஒன்றிய துவக்கப்பள்ளி செயலாளர்  வெள்ளப்பாண்டி,  மாவட்ட  செய்தித் தொடர்பாளர்  தங்கப்பாண்டியன்,  ஒன்றிய  இளைஞரணி  செயலாளர்  முருகன் மாலை அணிவித்தனர். சிவகாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகர செயலாளர் பாண்டியராசன் தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் துரை, வல்லரசு, தீபன்சக்கரவர்த்தி, லில்லிராஜன், செல்வமீனா, தங்கம், முத்துமுருகன், ஈஸ்வர்ஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிவகாசியில் ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்