×

திருச்செங்கோட்டில் நாளை திமுக செயற்குழு கூட்டம் மூர்த்தி எம்எல்ஏ அறிவிப்பு

திருச்செங்கோடு, நவ.21: நாமக்கல்  மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (22ம் தேதி) மதியம் 12 மணிக்கு திருச்செங்கோடு திமுக அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயல் வீரர்கள் கூட்டம் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.  எனவே, இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும்  பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.  மூர்த்தி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Murti MLA ,Announcement ,DMK ,Executive Meeting ,Tiruchengode ,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...