×

பரமத்திவேலூரில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பரமத்திவேலூர், நவ.21: பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்,  வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சலை தடுக்கும் வகையில்,  பரமத்திவேலூர் நகர திமுக மற்றும் கண்ணன் ஹார்டுவேர்ஸ் நிறுவனம் சார்பில்  பொதுமக்களுக்கு ஒரு மாதம் தினசரி காலை 7.30 மணி முதல் 10.30 மணி  வரை இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் கண்ணன் ஹார்டுவேர்ஸ் அருகில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் மையத்தை, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி தொடங்கி வைத்தார். டெங்கு  உள்ளிட்ட மர்ம காய்ச்சலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் நகர செயலாளர் மணிமாறன், கண்ணன், சுரேஷ்,  பிரதாப், சுந்தரம் மற்றும் திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Mullaperiyar MLA ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி