×

மலர் கண்காட்சிக்கு தயாராகும் பூங்கா விதை சேகரிப்பு பணிகள் துவக்கம்

ஊட்டி, நவ. 16: அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கோடை சீசனின் போது, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களை, மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்கா ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காக்களில் காய்கறி கண்காட்சியும் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதுதவிர கூடலூரில் வாசனை திரவியக் காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதில், ஊட்டி தவாரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால், ஆண்டு தோறும் தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் செடிகளில் ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூத்து குலுங்கும். மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது பல வகையான செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல், மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், 2019ம் ஆண்டு மே மாதம் நடக்குவுள்ள மலர் கண்காட்சி மற்றும் கோடை சீசனுக்கான விதைகள் சேகரிப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது.

 6 மாதங்களுக்கு பின் பூக்ககூடிய மலர் செடிகளான பென்சீனியம், பெட்டூனியம் மற்றும் சால்வியா போன்ற சில மலர் செடிகளின் விதைகள் ேசகரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அதேபோல், விதைகள் ேசகரிக்கப்பட்ட மலர் செடிகள் மற்றும் மழையில் அழுகிய செடிகளும் அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. ேதாட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 2019ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக, பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக விதைகள் சேகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. 6 மாதத்திற்கு பின் பூக்கக் கூடிய சில மலர் செடிகளில் இருந்து தற்போது விதைகள் சேகரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. விதை சேகரிப்பு பணி முடிந்தவுடன், காய்ந்த விதைகள் ஓரிரு நாட்களில் நாற்று உற்பத்திக்காக பூங்காவில் உள்ள நர்சரிகளுக்கு கொண்டுச் செல்லப்படும். அங்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும். நாற்றுக்கள் தயார் ஆனவுடன் பூக்கள் பூக்கும் மாதத்திற்கு ஏற்ப விதைகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்படும். தற்போது மேரிகோல்டு, சால்வியா, பெட்டூனியம், போர்ட்லூகா மற்றும் டெல்பீனியம் ஆகிய செடிகளின் விதைகள் சேகரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. நாற்று உற்பத்தி முடிந்தவுடன், நடவு பணிகள் படிப்படியாக துவக்கப்பட்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும். அதே போல், தொட்டிகளில் உள்ள மலர் செடிகள் அகற்றப்பட்டு, விரைவில் மண் நிரப்பும் பணிகள் துவக்கப்படவுள்ளது, என்றார்.

Tags : park ,Flower Exhibition ,
× RELATED தமிழகம் மாளிகை பூங்கா பராமரிக்கும் பணி மும்முரம்