×

திருச்செங்கோட்டில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

திருச்செங்கோடு, நவ.15: திருச்செங்கோட்டில் பரமத்திவேலூர், திருச்செங்கோடு சட்டமன்ற நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.  நாமக்கல் மேற்கு மாவட்டம், நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நாளை (16ம் தேதி) மாலை 4 மணிக்கு திருச்செங்கோட்டில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் பேசுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடக்கிறது. எனவே, பரமத்திவேலூர், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Meeting ,activists ,DMK ,Tiruchengode ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...