பந்தலூர், நவ. 15 : பந்தலூர் அருகே கையுன்னி அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளி விழா நேற்று காலை நடந்தது. வெள்ளிவிழா குழு தலைவர் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமாதேவி முன்னிலை வகித்தார். கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி விழாவை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான கால்பந்து, கயிறு இழுத்தல், இசைநாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தது.