பொள்ளாச்சி, நவ.15: பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், வடக்கிபாளையம் மற்றும் புரவிபாளையம், சூலக்கல், பொன்னாபுரம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 31 விவசாயிகள் மொத்தம் 45 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் மற்றும் 2ம் தரம் என பிரிக்கப்பட்டு, மேற்பார்வையாளர் விஜயகுமார் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
இதில், முதல் தர கொப்பரை ஒரு கிலோ ரூ.79.50 முதல் அதிகபட்சமாக ரூ.83.70 வரையிலும். 24 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ஒருகிலோ ரூ.53.75முதல் ரூ.75.90வரையிலும் என, மொத்தம் இரண்டரை டன் கொப்பரை ரூ.1.64லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை, 6வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.