×

குட்டீஸ்பெக்ஸ்-18 அஞ்சல்தலை கண்காட்சி துவக்கம்

திருச்சி, நவ.15: குழந்தைகள் தினத்தைமுன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் குட்டீஸ்பெக்ஸ்-18 மினி அஞ்சல்தலை கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை பொதுமக்கள் வருகிற 30ம்தேதி வரை பார்வையிடலாம்.
திருச்சி தலைமை அஞ்சலகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி, ‘குட்டீஸ்பெக்ஸ்-18’ மினி அஞ்சல் தலை கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் திருச்சி, தஞ்சாவூர், ரங்கம் கோட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அஞ்சல் தலைகள் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்கு வருகிற 30ம் தேதி வரை திறந்திருக்கும் என திருச்சி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags : Kuttispex -18 Poster Exhibition Launch ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ